Wednesday, January 11, 2012

சோதனை

காதோடு பாடல்களை ஒலிக்கச் செய்து
செல்லும் நகரவாசியும்
காதை பொத்தியவாறு முண்டாசு கட்டி
செல்லும் கிராமவாசியும்
மிகவும் சோதிக்கிறார்கள்
சாலையில் பயணிக்கையில்.

Thursday, December 8, 2011

உலகம்

உலகத்தை ஆட்டுவிப்பது
பணம் என்கிறான் வியாபாரி
பதவி என்கிறான் அரசியல்வாதி
அன்பு என்கிறான் நேசன்
கடவுள் என்கிறான் பக்தன்
விதி என்கிறான் சித்தன்
ஒன்று மட்டும் தெளிவாகிறது
ஆட்டுவிப்பது எதுவானாலும்
ஆடுபொருள் மனிதன் தான்.

பொறுப்பு

வெற்றிக்கு முழு காரணம்
நான் தான் என்று
கர்வம் கொள்ளும் மனிதன்
தோல்விக்கு காரணமாய் பொறுப்பேற்காமல்
நேரம் காலத்தை கூறுவதால்தான்
கோவில்களிலும் ஜோதிட நிலையங்களிலும்
கூட்டம் அலை மோதுகிறதோ ?